by Vignesh Perumal on | 2025-05-23 11:20 AM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இன்று விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் முக கவசம் அணிவது அவசியம் என்று தகவல் பரவி வந்த நிலையில், இந்த விளக்கம் பொதுமக்களிடையே நிலவிய குழப்பத்தை நீக்கியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை, தற்போதைய சூழலில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பெரிய அளவிலான அச்சம் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது மத்திய அரசு கோவிட்-19 பரவல் குறித்து எந்தவொரு புதிய ஆலோசனையையும் வெளியிடவில்லை. தமிழக சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) மூலம் கோவிட் உட்பட அனைத்து வைரஸ்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதன் மூலம் நிகழ்நேர தரவு அறிக்கை, மாடலிங் மற்றும் பகுப்பாய்வு சாத்தியமாகிறது.
தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்பு வலிமையானது என்றும், எந்த நேரத்திலும் விரிவாக்கம் செய்யக்கூடிய திறன் கொண்டது என்றும் செல்வவிநாயகம் கூறினார். தேவைப்பட்டால், பொதுமக்களுக்கு தொற்று பரவல் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தற்போதைய சூழ்நிலையில், கோவிட் குறித்து பீதியடையத் தேவையில்லை. தமிழக அரசு வலுவான கண்காணிப்பு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லது என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!