by Vignesh Perumal on | 2025-05-22 12:53 PM
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கோடை மழையால், காட்டேரி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டேரி அணை நிரம்பியதால், காட்டேரி நீர்வீழ்ச்சி மற்றும் லாஸ் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கமாக கோடை காலத்தில் வறண்டு காணப்படும் இந்த நீர்வீழ்ச்சிகள், தற்போது பெய்து வரும் மழையால் புதுப்பொலிவு பெற்றுள்ளன. கண்கவர் நீர்பெருக்கு, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை, அணை நிரம்பியிருப்பதும், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குடிநீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதோடு, கோடை வெப்பத்தின் தாக்கத்தையும் குறைத்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோடை மழையால் நீலகிரியின் இயற்கை எழில் மேலும் மெருகேறியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!