by Vignesh Perumal on | 2025-05-12 09:18 PM
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 13) முதுமலைக்கு வருகை தரவுள்ளதால், முதுமலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மாலை நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தருகிறார். அங்கு யானைகள் பராமரிப்பு மற்றும் முகாமின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக, நாளை மாலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதிய நேரங்களில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!