by Vignesh Perumal on | 2025-05-11 12:01 PM
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில், முத்துமாரியம்மன் கோயில் தேர் வடம் பிடிக்கும் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
திருமாவளவன், குறிப்பிட்ட சமூக மக்களிடம் மட்டுமே வடகாடு முத்து மாரியம்மன் கோயில் தேரின் வடம் தொடும் உரிமை உள்ளது என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே மோதல் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், வடகாடு இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக அவதூறு பரப்பியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமாவளவனின் இந்த பேச்சு, வடகாடு பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!