by Vignesh Perumal on | 2025-10-14 09:02 PM
திண்டுக்கல்லில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான 'காடு' என்ற அன்பழகன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவரது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் பொன்னுமாந்துறையைச் சேர்ந்தவர் குருநாதன் மகன் காடு (எ) அன்பழகன். இவர் சமீபத்தில் ஒரு வழிப்பறி வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில், இந்த காடு (எ) அன்பழகன் மீது ஏற்கனவே கொலை வழக்கு, அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை வழக்கு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட கடுமையான வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தன.
இதையடுத்து, ரவுடி காடு (எ) அன்பழகனின் குற்ற நடவடிக்கைகளை நிரந்தரமாக ஒடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், காடு (எ) அன்பழகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சிறையில் இருந்த காடு (எ) அன்பழகனை முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்த இச்சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!