by Vignesh Perumal on | 2025-09-25 03:40 PM
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஜி. தும்மலப்பட்டி கிளை அஞ்சல் அலுவலகத்தில், ₹52 லட்சத்திற்கும் மேல் பணத்தைக் கையாடல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அஞ்சல் அலுவலர் முனியாண்டி (59), பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜி. தும்மலப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வந்தார். அவர் மீது பணக் கையாடல் தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், அதிகாரிகள் அவரது கணக்குகளைத் தணிக்கை செய்தனர்.
தணிக்கையின் முடிவில், அவர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களான செல்வமகள் சேமிப்புத் திட்டம், சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு ஆகியவற்றில் உள்ள 87 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ₹52,05,650-ஐ கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானார்.
முனியாண்டியைப் பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், முனியாண்டி பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தலைமறைவான முனியாண்டியை கைது செய்தனர். பின்னர், அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!