by admin on | 2025-09-22 11:24 AM
*திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30,82,000 மோசடி பெண் உட்பட 2 பேர் கைது*
திண்டுக்கல்லை மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் இவரிடம் திண்டுக்கல் நேருஜி நகரை சேர்ந்த அபுசக்மான் என்பவர் மற்றும் நூர்ஜகான் ஆகிய 2 பேரும் பழகி சாகர் பைனான்ஸ் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் மாத ஏல சீட்டு நடத்துவதாகவும் கூறி நம்பிக்கையை வரவழைத்து ஏல சீட்டில் சேர வைத்து மாதம் ரூ 2 லட்சம் என்று கூறி 20 மாதங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்து வங்கி கணக்கு மூலம் ரூ.30,82,000 பெற்றுக் கொண்டு பணத்தை தர முடியாது என்று கூறி பணம் கேட்டு வந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவேன் 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து செந்தில்குமார் மாவட்ட S.P-யிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அபுசக்மான் மற்றும் உதவியாளர் நூர்ஜகான் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!