by Vignesh Perumal on | 2025-09-10 01:20 PM
நேபாளத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரக்கர் (65) போராட்டக்காரர்களால் வைக்கப்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நேபாளம் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், காட்மாண்டுவின் தல்லு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் இல்லத்திற்கு நேற்று (செப்டம்பர் 09, 2025) இரவு சில போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி ராஜ்யலட்சுமி சித்ரக்கர், தீயில் சிக்கி பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 11, 2025) அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவம், நேபாளத்தில் ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!