by Vignesh Perumal on | 2025-08-11 06:15 AM
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 10, 2025) நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில், பரத் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பரத், உறுப்பினர்கள் தனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற நடிகர் பரத், "இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உறுப்பினர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். சங்க உறுப்பினர்களுக்கு எந்த நேரத்தில் என்ன பிரச்சினை வந்தாலும், அதற்கான தீர்வை நிச்சயம் கொடுப்பேன்" என்று உருக்கமாகப் பேசினார். வெற்றி பெற்ற நடிகர் பரத் பெற்ற வாக்குகள் 491 வாக்குகள் என்பது கவனிக்கத்தக்கது.
தேர்தலில் நான்கு அணிகள் களமிறங்கின. தலைவர் பதவிக்கு பரத், சிவன் சீனிவாசன், வாசு விக்ரம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 2,000 உறுப்பினர்கள் இருந்தாலும், 859 நேரடி வாக்குகளும், 7 தபால் வாக்குகளும் பதிவாகின.
பரத் தலைமையிலான 'சின்னத்திரை வெற்றி அணி' இந்தத் தேர்தலில் பெரும்பாலான பதவிகளைக் கைப்பற்றி, சங்கத்தின் பொறுப்பை ஏற்றிருக்கிறது. இது சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!