by Vignesh Perumal on | 2025-05-03 12:54 PM
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரம் பைபாஸ் அருகே இன்று தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த நபர்கள், தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து மற்றும் தாக்குதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?