by Muthukamatchi on | 2025-04-24 06:24 PM
ஆண்டிபட்டி நகர்பகுதி ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் .தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
சித்திரை முதல் நாளில் இருந்து காப்புக்கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.அக்னி சட்டி எடுத்து ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் கைகளில் அக்னி சட்டி ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.நகர் பகுதி முழுவதிலும் இருந்து வந்திருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவினை கண்டு அம்மனை வழிபட்டனர்.இதையடுத்து ஊர்காத்த மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!