by Vignesh Perumal on | 2025-04-23 09:34 PM
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நாளை (24.04.2025) நிறைவடைய உள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (25.04.2025) முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை ஆசிரியர்கள் முடித்து, தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் வரும் 30.04.2025 (புதன்கிழமை) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டான 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி (02.06.2025), திங்கள் கிழமையன்று மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால், அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொழுதைக் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!