by Vignesh Perumal on | 2025-04-22 11:53 AM
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்ததாக வெளியான தவறான தகவலை அடுத்து, தமிழக சட்டப்பேரவையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.
அவர் பேசுகையில், "போப் பிரான்சிஸ் முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர். அவர் ஏழை எளியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு உலகிற்கு பேரிழப்பு" என்று கூறினார்.
இதையடுத்து, போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
எனினும், போப் பிரான்சிஸ் உயிருடன் நலமாக இருப்பதாக வாடிகன் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்த தவறான தகவலால் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!