by Vignesh Perumal on | 2025-04-22 10:28 AM
கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும். அதேபோல், எம் சாண்ட் விலை ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் விலை ரூ.7 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறையின் அனுமதிச் சீட்டு விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகளின் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!