by Vignesh Perumal on | 2025-04-01 05:07 PM
நூறுநாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி பாக்கி 4000 கோடியை ஒன்றிய அரசே உடனே வழங்கிடு என பல்வேறு கோரிக்கையை முன் வைத்து, தமிழ் மாநில விவசாய தொழிளாளர் சங்கம் சார்பில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பாக வி. தொ. ச மாவட்ட செயலாளர் தோழர் N. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தேவாரம் வ. உ. சி மைதானத்தில் இருந்து பேரணியாக வந்து தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் வீ.பாண்டி கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஈ. முத்துலட்சுமி, வி. ச ஒன்றிய செயலாளர் தோழர் ரா. ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் தோழர். ரா. சதீஸ் மற்றும் பெருமளவில் அனைத்து கிளைகளில் இருந்தும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!