by satheesh on | 2026-07-08 03:32 PM
திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் , கோமங்கலம்புதூர் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி நாளைய தினம் (08/07/2026) முதல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி சுங்கச்சாவடியில் விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருந்த காரணத்தினால் அனைத்து பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.ஜெயக்குமார் அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து நாளைய தினம் நடைமுறைப்படுத்த இருந்த சுங்கச்சாவடியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி அந்த சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்து நிர்ணயம் செய்த பின்பு , இந்த சுங்கச்சாவடி திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இதனை தொடர்ந்து ,நாளைய தினம் (08/07/2026)செயல்பட இருந்த சுங்கச்சாவடி-யானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!