by satheesh on | 2026-04-20 01:58 PM
மூட்டையில் ரூ.35.72 லட்சம் கட்டுக் கட்டாக பணம் - பறக்கும் படை சோதனையில் பிடிபட்டது எப்படி?
கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35.72 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று கோவில்பட்டி - கடலையூர் சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த இளைஞர் ஒருவரைப் போலீசார் மறித்துச் சோதனை செய்தனர். சோதனையில், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழுவினர், பணத்தைக் கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் இருந்த ரூ.35 லட்சத்து 72 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி சாக்கு மூட்டையில் இவ்வளவு பெரிய தொகை கடத்தப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர் : zN. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!