by satheesh on | 2026-03-15 05:48 PM
கோவையில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கோவை புதூர் 4-வது பட்டாலியன் (சிறப்பு போலீஸ் படை) கமாண்டண்ட் செந்தில்குமார் மார்ச் 14, 2026 அன்று கைது செய்யப்பட்டார். கோவை புதூர் 4-வது பட்டாலியனில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு, அங்கு கமாண்டண்ட்டாக இருந்த செந்தில்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்துத் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் செந்தில்குமாரை சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக செந்தில்குமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!