by satheesh on | 2026-03-14 06:38 PM
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : கேரள அரசு அந்தர் பல்டி!
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. மத பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் அதன் புதிய நிலைப்பாட்டை கேரள அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையாக அறிவிக்க உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், இறுதி முடிவு இடது ஜனநாயக முன்னணி தலைவர்களுடன் பேசி முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. CPM தலைமைக்கும், அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்தக் கொள்கை திருத்தத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. முந்தைய தேர்தல் பின்னடைவுகள் மற்றும் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் சாடல் களுக்கு பிறகு அரசியல் விளைவுகளைத் தணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை மூலம் வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் அரசிற்கு ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"