by admin on | 2026-03-04 07:34 PM
தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மீன் பண்ணையில் ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.03.2026) திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
மத்திய மாநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் நிதி உதவியுடன் நடுத்தர அளவிலான வண்ண மீன் பண்ணை அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.3.20 இலட்சம் மானியத்துடன் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் கோல்டு, ஏஞ்சல், டெட்ரா, பிளாட்டி, கப்பீஸ், மோலி, ஜிப்ரா, டைகர், மற்றும் கொய் போன்ற வண்ண மீன்கள் தொட்டிகளில் இருப்பு செய்து உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மதுரை மண்டலம்) திரு. ந.வேல்முருகன், உதவி இயக்குநர் (தேனி) திரு.ந.சௌந்தரபாண்டியன் மற்றும் மீன்வள ஆய்வாளர், சார் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?