by admin on | 2026-03-04 07:34 PM
தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மீன் பண்ணையில் ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.03.2026) திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
மத்திய மாநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் நிதி உதவியுடன் நடுத்தர அளவிலான வண்ண மீன் பண்ணை அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.3.20 இலட்சம் மானியத்துடன் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் கோல்டு, ஏஞ்சல், டெட்ரா, பிளாட்டி, கப்பீஸ், மோலி, ஜிப்ரா, டைகர், மற்றும் கொய் போன்ற வண்ண மீன்கள் தொட்டிகளில் இருப்பு செய்து உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மதுரை மண்டலம்) திரு. ந.வேல்முருகன், உதவி இயக்குநர் (தேனி) திரு.ந.சௌந்தரபாண்டியன் மற்றும் மீன்வள ஆய்வாளர், சார் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!