by Vignesh Perumal on | 2026-02-24 10:31 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கொரட்டூரில் பிரமாண்ட வாழ்த்தரங்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, முதல்வரின் தனிப்பட்ட குண நலன்கள் குறித்துப் பேசியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேடையில் பேசிய விஜய் ஆண்டனி, முதல்வருடன் தனக்குள்ள மரியாதையான உறவு குறித்துப் பகிர்ந்துகொண்டார். “அரசியலைத் தாண்டி ஸ்டாலின் ஐயா மேல் எனக்குப் பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. நான் அவரைப் பார்த்தவரை, இதுவரை ஒரு இடத்தில் கூட அவர் முகம் சுளிக்கிற மாதிரியோ அல்லது யாரையாவது கடிந்து (கோபமாக) பேசியோ நான் பார்த்ததே இல்லை. எப்போதும் அவ்வளவு பண்பாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார்.”
முதல்வரின் அணுகுமுறை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் பல நேரங்களில் கோபப்பட வாய்ப்பிருந்தும், முதல்வர் எப்போதும் நிதானத்தைக் கடைபிடிப்பதாகப் பாராட்டினார்.
அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதராக முதல்வரின் எளிமையும், மனிதநேயமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது என்று தெரிவித்தார்.
"அவர் ஒரு உண்மையான மனிதநேயம் மிக்கவர்" என்று புகழ்ந்த விஜய் ஆண்டனி, முதல்வருக்குத் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கொரட்டூரில் நடைபெற்ற இந்த வாழ்த்தரங்க விழாவில் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விஜய் ஆண்டனியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?