by admin on | 2026-02-13 09:09 PM
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில நதலைவர் ப. ஹரிஹரன்
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனளித்து வருகின்றன. குறிப்பாக மகளிர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து, இரவு பகல் பாராது, வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் சமூக நலனுக்காக பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பும் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியமானதாகும். பொதுமக்களின் குரலாகவும், அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பாலமாகவும் பத்திரிக்கையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே,அBரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்,
நல வாரிய உறுப்பினர்களாக உள்ளவர்கள்,
அரசு அடையாள அட்டை மற்றும் போக்குவரத்து அட்டை பெற்றுள்ளவர்கள்,
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள்
இவர்களை அடிப்படையாகக் கொண்டு, கோடைகால ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேர்தல் காலங்களில் கடும் உழைப்புடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பத்திரிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலித்து சாதகமான அறிவிப்பை வழங்கும் என நம்புகிறோம்.
ப. ஹரிஹரன்மா நில தலைவர்த மிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம்
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!