by satheesh on | 2026-02-09 07:28 PM
டெல்லி : இன்று (பிப்ரவரி 9, 2026) காலை 9 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1:11 மணியளவில் பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், வரும் பிப்ரவரி 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக உஷாரான டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் சிக்காததால், இது ஒரு வதந்தி (Hoax) என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாடாளுமன்றத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!