by satheesh on | 2026-02-09 07:28 PM
டெல்லி : இன்று (பிப்ரவரி 9, 2026) காலை 9 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1:11 மணியளவில் பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், வரும் பிப்ரவரி 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக உஷாரான டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் சிக்காததால், இது ஒரு வதந்தி (Hoax) என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாடாளுமன்றத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?