by satheesh on | 2026-02-09 03:42 PM
கேரள : திருச்சூர் மாவட்டம் புன்னையூரில் 'மாடின் நாலெட்ஜ் கார்டன் பப்ளிக் ஸ்கூல்' (Ma'din Knowledge Garden Public School) என்ற தனியார் பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் சுமார் 300 குழந்தைகளுக்குப் பாலர் கல்வி (Preschool) வழங்கப்பட்டு வந்தது. ஆனால், முறையான கல்விக்குப் பதிலாக அங்கே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மத போதனைகள் மட்டுமே பிரதானமாகப் கற்பிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிசங்கர் வி. மேனன், கடந்த பிப்ரவரி 2, 2026 அன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கினார்: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act), 2009-ன் பிரிவு 18-ன் படி, அரசின் முறையான அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக்கூடாது. இந்தப் பள்ளி அத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அரசு அங்கீகாரம் தேவைப்படும் ஒரு கல்வி நிறுவனம், அரசின் முன் அனுமதி இன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் போதிக்கும் மையமாகச் செயல்பட முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முறையான உரிமம் இல்லாததால் இந்தப் பள்ளியை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளியை மூட உத்தரவிட்டாலும், அங்கு படிக்கும் 300 மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஒரு சிறிய சலுகையை வழங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டு (2025-2026) முடியும் வரை இந்தப் பள்ளி இயங்கலாம் என்றும், அதற்குள் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!