by Vignesh Perumal on | 2026-02-04 02:55 PM
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக வெளியிட்டுள்ளார். முதலாவது கட்ட வாக்குறுதிகள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விளிம்புநிலை மக்கள், மாணவர்கள் மற்றும் சிறுபான்மையினரைக் கவரும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.
முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் தற்போதுள்ள தொகையிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். அந்த நிலுவைத் தொகையை வங்கிகளுக்குத் தமிழக அரசே முழுமையாக ஏற்கும். இது லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
வாழ்வாதார உதவியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவிகளுக்கு இது முக்கிய அறிவிப்பாகும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைபவர்களுக்கு உயர்தரச் சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மகளிர் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க, அவர்களுக்குத் தேவையான மூலதனம் வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி இந்த வாக்குறுதிகளை வெளியிடுகையில், "திமுக அரசு செய்யத் தவறிய மக்கள் நலத்திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றும். இது வெறும் வாக்குறுதி அல்ல, எங்களது உறுதிமொழி" என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கல்வி கடன் தள்ளுபடி மற்றும் சிலிண்டர் அறிவிப்புகள் கடந்த தேர்தல்களில் திமுக பயன்படுத்திய அதே பாணியிலான உத்திகள் என்பதால், இது ஆளும் தரப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!