by admin on | 2026-02-02 04:27 PM
தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்....!!!
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்*
கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளருக்கு,வளர்ப்பு கூலி கிலோவுக்கு 20 ரூபாய் வழங்க கோரி, கண்ணில் கருப்பு பட்டை கட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டாயப்படுத்தி குஞ்சுகளை இறக்குவதை தடுக்கவும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு, தேனி ஆட்சியர ரஞ்சித் சிங்கிடம் வழங்கப்பட்டது. இது குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!