by admin on | 2026-01-24 07:55 AM
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் காலிப்பாட்டில்களை சேகரித்து அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி சென்னை ஏற்படுத்துள்ளதோடு மன உளைச்சலும் ஏற்பட்டு வருகிறது. காலி பாட்டில் விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிலைகள் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது
காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமுல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாகம் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த கூடுதல் வேலை பளு காரணமாக அவதிபடுவதால் மாற்று திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக கூறியபோது, மாண்புமிகு நீதியரசர் அவர்கள் கடை பணியாளர்களுக்கு என்ன மாற்று திட்டம் செயல்படுத்தப்போகிறீர்கள் என்பதை எழுத்து பூர்வமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் மேலும் செயல்படுத்த படாத மாவட்டங்களில் எவ்வளவு பாட்டில்கள் விற்பனை ஆகிறது என்ற புள்ளி விவரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கை வருகிற 30/1/26 அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவு வழங்கினார். எனவே காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் விரைவில் அவுட் சோர்ஸிங் முறையில் அமுல்படுத்த உள்ளதாக தெரிகிறது, ஆனால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ள தால் தமிழக அரசு காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை (டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல்) உடனடியாக மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்கம் திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநில மையம் மாவட்ட செயலாளர் நா.உத்தரகுமார் திருப்பூர்
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஆலோசனைக் கூட்டம்...!!!
இவ்வளவு செலவா? அறநிலையத்துறைக்கு அண்ணாமலை கண்டனம் !
சட்டமன்றத் தேர்தல் தேதி? புதிய தகவல் !
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!