by satheesh on | 2026-01-22 06:25 PM
நெல்லை சரகத்தில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்: டி.ஐ.ஜி உத்தரவு ;
நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட 8 காவல் ஆய்வாளர்களை (Taluk) உடனடியாக பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி (DIG) இன்று உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்ற விவரங்கள்:
E. சாம்சன்: தென்காசி மாவட்ட குற்றப் பிரிவு ஆவணக் காப்பகத்திலிருந்து (DCRB), கன்னியாகுமரி மாவட்ட NSD (நக்சல் தடுப்பு பிரிவிற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
S. சத்திய பாமா: கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து (AWPS), தென்காசி மாவட்ட DCRB பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். U. ஜென்சி: நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து (PEW), கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றப்பட்டுள்ளார். K. சுதாகர்: கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவிலிருந்து, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். S. யேசுராஜசேகரன்: தூத்துக்குடி வடக்கு குற்றப்பிரிவிலிருந்து, தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். M. மணிகண்டன்: குளத்தூர் காவல் நிலையத்திலிருந்து, எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். S. செந்தில்வேல் குமார்: எட்டயபுரம் காவல் நிலையத்திலிருந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். M. ரென்னிஸ்: ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலிருந்து, குளத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட மற்றும் பணியில் சேர்ந்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!