by admin on | 2026-01-17 07:19 PM
*நெல்லையில் கைத்துப்பாக்கி விற்பனை செய்த விவகாரம் - திண்டுக்கல் வாலிபர்கள்2 பேர் கைது*
நெல்லையில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்த அமீர்சுகைல்(26), ரத்தினம்பாலா(40), முசாம்பீர் ஆகிய 3 பேரை திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, 3 வெடித்த தோட்டா, 1 உடைந்த தோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். துப்பாக்கி வாங்கியவர் துப்பாக்கி சரியாக சுடவில்லை என்று அவர்களிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல்லை சேர்ந்த சாகுல்அமீது (எ) டைல்ஸ் சாகுல், சேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!