by satheesh on | 2026-01-15 02:48 PM
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு ;
ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஈரான் வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், மாற்றுப் பாதை வசதி இல்லாத இடங்களில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightRadar24 தளத்தின் தகவல்படி, தற்போது ஈரானின் வான்பரப்பில் வணிக ரீதியான விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாகப் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரானைத் தவிர்த்து பாதுகாப்பான வான்வெளிகள் வழியாகச் சுற்றுப் பாதையில் செல்வதால், உலகளாவிய விமான அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டிய பயணிகள் கூடுதல் காத்திருப்பு நேரத்தையும், நீண்ட பயணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!