by admin on | 2026-01-14 04:38 PM
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் முன்னிலையில் ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்ற கோலப்போட்டியில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கடலூர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. N. கோடீஸ்வரன் திரு. V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. S. தமிழ் இனியன் திருமதி. A. மனிஷா, திரு. P. அப்பாண்ட ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!