by Vignesh Perumal on | 2026-01-06 04:22 PM
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர், படகிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, சின்னாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (51). மீனவரான இவர், இன்று அதிகாலை தனது நண்பர் ராஜேந்திரன் (55) என்பவருடன் சேர்ந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.
இருவரும் முத்துப்பேட்டை முகத்துவாரம் அடுத்த உப்புகாடு அருகே படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மீன்பிடிப்பதற்காக வலையை விரித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குமார் நிலைதடுமாறி படகிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ளார்.
குமார் கடலில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ராஜேந்திரன், அவரை மீட்கப் போராடியுள்ளார். இருப்பினும், நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும், அதிகாலை நேரம் என்பதாலும் குமார் நீரில் மூழ்கி மாயமானார்.
இதனைத் தொடர்ந்து, சக மீனவர்களின் உதவியுடன் நீண்ட தேடுதலுக்குப் பிறகு குமார் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.
இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் மீனவர் உயிரிழந்த சம்பவம் ஜாம்புவானோடை சின்னாங்கொல்லை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குமாருக்குக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!