by Vignesh Perumal on | 2026-01-03 04:40 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை தொப்பம்பட்டி பகுதியில் நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே உள்ள சரவணம்பட்டி பிரிவு சாலையில், வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டெம்போ ட்ராவலர் வாகனம், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், இருசக்கர வாகனத்தில் பயணித்த கார்த்திக் என்பவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய டெம்போ ட்ராவலர் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணமா? அல்லது சாலையின் வளைவில் போதிய வெளிச்சம் இல்லாதது காரணமா? என்பது குறித்து கீரனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி - தாராபுரம் சாலை மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வளைவுகள் அதிகம் என்பதால், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!