by admin on | 2025-12-30 01:03 PM
காக்கி சட்டை அணிவதில் பெருமை கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பெருமையாக பேசினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் அமைப்பில் 09 ஆண்கள் மற்றும் 07 பெண்கள் என மொத்தம் 16, கடலோர ஊர் காவல் படைக்கு 15 ஆண்கள் என மொத்தம் 31 ஊர்க்காவல் படை ஆளிநர்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட 31 ஊர் காவல் படையினருக்கு கடந்த 03.11.2025 ஆம் தேதி முதல் 30.12.2025 தேதி வரை மொத்தம் 45 நாட்கள் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்காவல் படை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஊர்காவல் படையினருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக பயிற்சி செய்த ஊர்க்காவல் படையினருக்கு பண வெகுமதி மற்றும் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, வட்டார தளபதி டாக்டர். A.பிளாட்பின், துணை வட்டார தளபதி திருமதி.K.R.மைதிலி சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்..
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!