by Vignesh Perumal on | 2025-12-20 01:13 PM
கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பண்டிகைக்கு முந்தைய நாளான வரும் டிசம்பர் 24-ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
உலகமெங்கும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அவர்கள் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், தேவாலயங்களில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும்.
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி: மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளான டிசம்பர் 24-ஆம் தேதியன்று, மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களைக் கொண்டு அவசரப் பணிகளுக்காகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை தடையின்றி நடைபெறும் என்றும் ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!