by admin on | 2025-12-06 05:43 AM
வைகை அணையல் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருதுமால் நதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது- விருதுநகர்,. சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் இன்று முதல் 8 நாட்களுக்கு வைகை ஆற்றின் வழியாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர்மட்டம் 64 அடியாக உள்ள நிலையில் அரசின் உத்தரவுப்படி வைகைஅணையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருத்துமால் நதி பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உபவடி நிலங்களில் அமைந்துள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதி பாசனத்திற்கு இன்று முதல் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ச்சியாக 8 நாட்களுக்கு திறக்கப்படும் என்றும்
இதன்மூலம் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் திறக்கப்படும் தண்ணீர் வைகைஆற்றின் வழியாக திறக்கப்படுவதாகவும் வைகை பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது வைகைஅணையில் நீர் இருப்பு 4378 மில்லியன் கன அடியாகவும், வைகைஅணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1346 கன அடியாகவும் உள்ளது.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!