by Vignesh Perumal on | 2025-11-19 11:47 AM
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று (நவம்பர் 19, 2025) காலை ரயில்வே காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 4 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்கு வங்க மாநிலம் புருலியாவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி நோக்கிச் செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு ரயில். இந்த ரயில் இன்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைந்தது.
திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சக்திசண்முகம், மதுரைவீரன், சரவணகுமார், மதன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டி ஒன்றில், பயணிகள் இருக்கைக்கு அடியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைச் சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) இருந்தது கண்டறியப்பட்டது.போதைப்பொருட்கள் மற்றும் புகையிலையை உடனடியாகப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவற்றை எவ்வித ஆவணங்களுமின்றி கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வடமாநிலத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இந்தக் கஞ்சா மற்றும் குட்காவை கடத்திச் செல்ல முயன்ற நபர்கள், சோதனையைக் கண்டதும் பையை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் பயணிகள் மூலம் விசாரணை நடத்தி, கடத்தலில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!