by Vignesh Perumal on | 2025-10-23 01:18 PM
திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, நட்சத்திர ஏரி (Kodai Lake) அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பலத்த மழையின் காரணமாக நட்சத்திர ஏரிக்கு அருகிலுள்ள பகுதியில் நின்றிருந்த மிகப் பெரிய மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்தது. முறிந்து விழுந்த மரம் அருகிலிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மீதும், முக்கியச் சாலையின் குறுக்கேயும் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலை முழுவதும் மரம் விழுந்து கிடப்பதால், நட்சத்திர ஏரி சுற்றுப்பாதையில் கொடைக்கானலின் முக்கியப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.
மழை காரணமாக மின் கம்பிகள் மீது மரம் விழுந்துள்ளதால், உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மின்வாரியத் துறையினர் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த மின் கம்பிகளைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் கொடைக்கானல் நகரில் இயல்பு வாழ்க்கை சிறிது பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!