by Vignesh Perumal on | 2025-09-22 02:05 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி, மீனாட்சி நாயக்கன்பட்டி பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி, பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர், பல ஆண்டுகளாகத் தாங்கள் வசித்து வரும் இடத்திற்குப் பட்டா கேட்டு அரசுக்கு விண்ணப்பித்து வந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22, 2025) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், உடனடியாகத் தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் பேசி, அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, தம்பதியினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் உள்ள மற்ற மக்களுக்கும் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!