by Vignesh Perumal on | 2025-09-21 02:56 PM
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து, 50 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் கருப்பதேவனூரைச் சேர்ந்த பேபி (50) என்ற பெண், இன்று (செப்டம்பர் 21, 2025) கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளார். திடீரென, அங்கிருந்த ஒரு கிணற்றில் அவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் மிதந்த பேபியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேபியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!