by Vignesh Perumal on | 2025-09-17 08:58 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் நிதி தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. கோயில் நிதியைப் பயன்படுத்தித் திருமண மண்டபங்களைக் கட்டுவதைவிட, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் கோயில் வருமானம், திருமண மண்டபங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதாக ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், கோயில் நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் முக்கியக் கருத்துகளை முன்வைத்தனர். அவர்கள், "பக்தர்கள் கோயிலுக்கு அளிக்கும் காணிக்கை, திருமண மண்டபங்களைக் கட்டுவதற்காக அல்ல. திருமண மண்டபங்களில் ஆபாசப் பாடல்களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "அதற்குப் பதிலாக, அந்த நிதியையும், இடத்தையும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற சமூக நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தலாம்" என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் குழு......
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!