by Vignesh Perumal on | 2025-09-11 05:57 PM
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில், தண்ணீர் லாரி மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.
இன்று (செப்டம்பர் 11, 2025) மதியம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில் உள்ள தங்கச்சியம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று, முன்னால் சென்ற கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் உடனடியாகக் காயமடைந்தவர்களை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!