by Vignesh Perumal on | 2025-08-31 08:06 PM
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் ஐபிஎஸ் பதவியேற்றுக்கொண்டார்.
சங்கர் ஜிவால் இன்று மாலை தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து, தமிழக காவல்துறையின் புதிய பொறுப்பு டிஜிபி ஆக, வெங்கடராமன் ஐபிஎஸ் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது, வெங்கடராமனிடம் தனது கோப்புகளை சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.
வெங்கடராமன், இதற்கு முன்பு தமிழக காவல்துறையின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாள்வதில் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதால், அவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலுக்குப் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காவல்துறையினர் மத்தியில் அவர் பேசும்போது, "என்னுடைய 30 ஆண்டுகளுக்கும் மேலான காவல் பணியில், நான் கற்றுக்கொண்டது நிறைய. தமிழக காவல்துறையில் பணியாற்றியது எனக்குப் பெருமை. எனது பணிக்காலத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!