by Vignesh Perumal on | 2025-08-24 11:45 AM
கரூரில் பாலியல் தொழில் தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளர் ரகுபதி உட்பட 3 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளரான ரகுபதி, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தான்தோன்றிமலை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
கண்காணிப்பின் முடிவில், பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக அங்குச் சென்று சோதனை நடத்தினர். சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ரகுபதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இந்தச் செயலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!