by Vignesh Perumal on | 2025-08-14 06:58 AM
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட 'தாலிக்குத் தங்கம்' திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக இருந்த 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை நிறுத்தியது. இதனால், பல ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் தலா ஒரு பவுன் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, "தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. அரசு தடுக்கிறது. 2026-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக இருந்தது. தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000, 10 அல்லது 12-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்' என மாற்றப்பட்டு, திருமண உதவித்தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!