by Vignesh Perumal on | 2025-08-12 02:38 PM
2018-ஆம் ஆண்டு, திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபிராமியின் மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ல், அபிராமி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்துக் கொலை செய்தார். இந்த வழக்கில், அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தற்போது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!