by Vignesh Perumal on | 2025-08-07 02:41 PM
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ரமேஷ் (48) என்பவர், ₹2,500 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ், ஒரு வேலையை முடிப்பதற்காகப் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாகத் தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரமேஷைப் பின்தொடர்ந்து கண்காணித்தனர். இன்று, ரமேஷ் லஞ்சமாக ₹2,500-ஐப் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ரமேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!