by Vignesh Perumal on | 2025-08-07 11:56 AM
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் அமைதிப் பேரணி இன்று (ஆகஸ்ட் 7, 2025) நடைபெற்றது.
இந்த அமைதிப் பேரணி, சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலை அருகிலிருந்து தொடங்கியது. தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக, கருப்புச் சட்டை அணிந்து, அமைதியாகப் பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணி மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை சென்றது. அங்கு, மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில், அவரது கொள்கைகள் மற்றும் தியாகங்களை நினைவுகூர்ந்து, தி.மு.க.வினர் இந்தப் பேரணியை நடத்தினர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!