by Vignesh Perumal on | 2025-08-04 11:41 AM
திண்டுக்கல், என்.ஜி.ஓ. காலனி, நாகா மில் எதிரே உள்ள பாக்யா ஹோட்டலில் கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.
ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டலில் இன்று காலை கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் போராடித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், ஹோட்டலில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்தன.
கேஸ் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!