by Vignesh Perumal on | 2025-08-02 11:40 AM
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 2, 2025) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை மீதான நம்பிக்கை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. சமீபத்திய விலை உயர்வுக்கான முக்கிய காரணம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை உயர்ந்த அதேவேளையில், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹1,000 உயர்ந்து ₹1,05,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ₹1 உயர்ந்து ₹105.50-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்க நினைப்போர் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!